×

குடியுரிமை சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா

ஆத்தூர், மார்ச் 2: குடியுரிமை சட்டத்தை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில், நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, ஆர்ப்பாட்டம் நகர நிர்வாகி அஸ்ஸலாம் தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணியளவில் துவங்கிய ஆர்ப்பாட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. தர்ணா போராட்டத்தில், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Dawheed Jamaat ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து